Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர் ஐடி ரெய்டுகள் - மடியில் கனத்துடன் அலறும் தி.மு.க மடியில் கனம் வழியில் பயம்!

தொடர் ஐடி ரெய்டுகள் - மடியில் கனத்துடன் அலறும் தி.மு.க மடியில் கனம் வழியில் பயம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 April 2021 2:00 PM IST

தொடர்ச்சியான ஐடி ரெய்டுகளால் மடியில் கனத்துடன் அலரும் தி.மு.க.

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள செந்தாமரை வீடு உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தி.மு.க வேட்பாளர் எ.வ வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.


தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தி.மு.க'வின் முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வருமான வரித்துறையினரின் இந்த சோதனைக்கு தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது ஜனநாயகமான போக்கு அல்ல; நாணயமான அரசியல் அல்ல. ரெய்டு போன்ற பூச்சாண்டி வேலைக்கெல்லாம் தி.மு.க பயப்படாது.


பா.ஜ.க கூட்டணி கட்சிகள் மீதான வருமான வரித்துறை சோதனை கண்துடைப்புக்காக நடத்தப்படுகிறது. ஆனால் தி.மு.க மீதான ரெய்டு, பழிவாங்கும் நடவடிக்கைக்காக நடத்தப்படுகிறது. அடக்குமுறைகள், வழக்குகள், அவதூறுகளை தவிடுபொடியாக்கி வந்த இயக்கம் தி.மு.க'' என துரைமுருகன் கூறினார்.

மடியில் கனம் இல்லாதவர்கள் தேர்தல் நேரத்தில் ரெய்டு வந்தால் அதை விடுத்துவிட்டு வேலையை பார்க்க வேண்டியதானே அதை விட்டு விட்டு ஐடி ரெய்டுக்கு பதறினால் மடியில் கனம் இருப்பதால் தானே வழியில் பயம் என்று தோன்றுகிறது என்கிறனர் அரசியல் விமர்சகர்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News