Kathir News
Begin typing your search above and press return to search.

இன்றைய செய்திதாளில் தி.மு.க பற்றிய விழிப்புணர்வு - அரண்டு போய் புலம்பும் தி.மு.க தலைவர் ஸ்டாலின்!

இன்றைய செய்திதாளில் தி.மு.க பற்றிய விழிப்புணர்வு - அரண்டு போய் புலம்பும் தி.மு.க தலைவர்  ஸ்டாலின்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  4 April 2021 7:00 AM GMT

தமிழகத்தில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடையும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் முழு பலத்தை பிரயோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் இன்றைக்கு முக்கியமானது தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் அனைத்து செய்தி தாள்களிலும் நான்கு பக்கம் அளவிற்கு தி.மு.க ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற செய்தி சேகரிப்புகளே. இந்ந தேர்தலில் இந்த விளம்பரம் முக்கிய பங்கு வகிக்கும் என அனைவராலும் கூறப்படுகிறது.

பிரச்சார செய்திகள் இல்லாமல், பிரச்சார வீடியோக்கள் இல்லாமல் தி.மு.க ஆட்சியில் இருந்த பொழுது என்னென்ன அராஜகம் செய்ததோ அவையனைத்தும் செய்திதாள்களில் செய்திகளாக வந்தன அவைகளை சேகரித்து திரும்பவும் தேதி குறிப்பிட்டு மறுபதிப்பு செய்து அனைத்து நாளிதழ்களிலும் "ஏன் தி.மு.க" வரக்கூடாது என வெளியிட்டிருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதனை நன்கு உணர்ந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கையளித்துள்ள அவர் அந்த அறிக்கையில் முக்கியமாக குறிப்பிட்டுள்ளது, "தோல்வி பயத்தால் இது போன்ற 4 பக்க செய்திதாள் விளம்பரம் குடுத்துள்ளார்கள், அ.தி.மு.க'வின் பொய்களை மக்கள் நம்ப தயாராக இல்லை" எனவும், "பொய் விளம்பரங்களை குடுத்து மக்களை ஏமாற்றும் கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்


இவையனைத்தும் தி.மு.க பற்றி செய்திகளாக வந்ததே தவிர இவைகள் விளம்பரம் இல்லை. நடந்த செய்திகளை தானே பத்திரிக்கைகளில் குடுத்துள்ளனர் என மக்களே கூறும் அளவிற்கு இன்றைய விளம்பரம் மக்கள் மத்தியில் மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News