வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு 1 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு செல்போன் - யோகி அதிரடி அறிவிப்பு!
By : Mohan Raj
வாஜ்பாய் பிறந்தநாளில் ஒரு கோடி மாணவ-மாணவியருக்கு கைப்பேசி, கையடக்க கணிணி வழங்க உத்திரபிரதேச அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
ஐ.டிஐ, பட்டயப்படிப்பு, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, பொறியியல் இறுதி ஆண்டு படிப்பு, மருத்துவ உயர்கல்வி இறுதியாண்டு, பி.டெக், எம்.டெக் உள்ளிட்ட படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 25-ந் தேதி முதல் கட்டமாக ஒரு லட்சம் மாணவர்களுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் செல்போன், கையடக்கக் கணினியை வழங்குகிறார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
இதில் பயன்பெறுவதற்காக ஏற்கனவே 38 லட்சத்திற்கு மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துவிட்டனர். லாவா, சாம்சங், ஏசர் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து உத்தரபிரதேச யோகி அரசு செல்போன், டேப்லெட்டை கொள்முதல் செய்ய இருக்கிறது.
இந்த அறிவிப்பால் உத்தரபிரதேச மாநில மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.