"மார்ச் 10'ம் தேதி பாருங்க சமாஜ்வாடி கட்சி தோல்வி முகத்தை" - சவால் விடும் யோகி
By : Mohan Raj
"மார்ச் 10'ம் தேதி அன்று வெளியாக உள்ள தேர்தல் முடிவுகள் சமாஜ்வாடி கட்சிக்கு அவமானகரமான தோல்வியாக முடியும்" என உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சவால் விடுத்துள்ளார்.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் கட்சிகளுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் அதிக சட்டப்பேரவை தொகுதிகளை உடைய பெரிய தொகுதியான உத்திரபிரதேச தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அங்கு தற்போதைய முதல்வர் யோகி மற்றும் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவிற்கும் போட்டி கடுமையாக உள்ளது.
இந்நிலையில் முதல்வர் யோகி கூறியுள்ளதாவது, "முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பா.ஜ.க'வில் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். தேசத்தின் முன்னேற்றத்தின் மீது பிரதமர் மோடி கொண்டுள்ள பார்வையை கண்டு அபர்ணா அவர்களை பின்பற்றும் நோக்கில் பா.ஜ.க'வில் இணைந்துள்ளார். ஆளும் பா.ஜ.க அரசு இங்கு 300 தொகுதிகளுக்கும் மேல் கைப்பற்றும்.
மார்ச் 10'ம் தேதி அன்று வெளியாக உள்ள தேர்தல் முடிவு, சமாஜ்வாடி கட்சிக்கு அவமானகரமான தோல்வியாக அமையும். தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக அரசியலில் ஈடுபட்டு வரும் அகிலேஷ் யாதவ் சாதி மற்றும் மதத்தை பயன்படுத்தி வருகிறார்" என கூறினார்.