Kathir News
Begin typing your search above and press return to search.

'மனு மீதான 100 நாட்களில் தீர்வுன்னு சொன்னீங்க! ஏன் சாவிய தொலைச்சுட்டீங்களா?' - ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பும் சீமான்!

மனு மீதான 100 நாட்களில் தீர்வுன்னு சொன்னீங்க! ஏன் சாவிய தொலைச்சுட்டீங்களா? - ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பும் சீமான்!

Mohan RajBy : Mohan Raj

  |  27 Jun 2021 11:39 AM GMT

"100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள், 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது. என்னவாயிற்று தி.மு.க வாக்குறுதி?" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது.

என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே! மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?" என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News