Kathir News
Begin typing your search above and press return to search.

மதவெறியர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது - எச்சரிக்கும் ஹெச்.ராஜா !

மதவெறியர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது - எச்சரிக்கும் ஹெச்.ராஜா !

Mohan RajBy : Mohan Raj

  |  3 Nov 2021 1:55 PM GMT

"இஸ்லாமிய மதவெறியர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவர்களுக்கு நல்லது" என பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்ற இஸ்லாமியர்களின் போஸ்டருக்கு ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தமிழ்நாடு ஜமாத் அமைப்பு சுவரொட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "தீமையை தரும் பட்டாசை தவிர்போம். உங்கள் கைகளால் நாசத்தை தேடிக் கொள்ளாதீர்கள். நன்மையை செய்யுங்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். வீண் விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடல் பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். யாருடைய தயவு மற்றும் கரங்களிலிருந்து பிற மக்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ அவரே சிறந்த முஸ்லிமாவார். பணத்திற்கும், மனித இனத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய பட்டாசை தவிர்போம்" என தீபாவளி கொண்டாடும் இந்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தபடி வாசகங்கள் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளதாவது, "முஸ்லிம் மதவெறி அமைப்பு இந்துக்களின் பண்டிகை, பழக்க வழக்கங்களில் தலையிட்டால் அதேபோல் இவர்கள் பண்டிகைகள் குறித்தும் இந்துக்கள் கருத்துக்கூற வேண்டிவரும். இஸ்லாமிய மதவெறியர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவர்களுக்கு நல்லது" என கடும் கோபத்துடன் குறிப்பிட்டுள்ளார்.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News