Kathir News
Begin typing your search above and press return to search.

ஓட்டு போட்ட பொள்ளாச்சி தொகுதியை மறந்த தி.மு.க. எம்.பி - அம்பலமாகும் மக்களவை தகவல்கள்!

ஓட்டு போட்ட பொள்ளாச்சி தொகுதியை மறந்த தி.மு.க. எம்.பி - அம்பலமாகும் மக்களவை தகவல்கள்!

Yuvaraj RamalingamBy : Yuvaraj Ramalingam

  |  17 March 2022 4:19 AM GMT

பொள்ளாச்சி தொகுதி திமுக எம்.பி. சண்முகசுந்தரம் தனது தொகுதியை தவிர்த்து மற்றவர்களுக்காக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருப்பது அத்தொகுதி மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து டெல்லி பாராளுமன்றத்திற்கு செல்லும் எம்.பி.,க்கள் தான் சார்ந்த தொகுதிகளின் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். அதற்கான தீர்வை காண்பதற்கு முயற்சிக்க வேண்டும். ஆனால் பொள்ளாச்சி தொகுதி திமுக எம்.பி., சண்முகசுந்தரம் என்பவர் மற்றவர்களை வியப்படையும் படி நடந்து கொண்டுள்ளார். பொள்ளாச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகள் ஏராளமாக உள்ளது. அது பற்றிய கேள்விகள் எதையும் எழுப்பாமல், டெல்லியில் மருத்துவனை ஏன் கட்டவில்லை, காஷ்மீரில் ஏன் இந்த பிரச்சனை என்று உப்பு, சப்பு இல்லாத கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் எழுப்பிய கேள்விகள் தற்போது இணையத்தில் வலம் வருகிறது.

பொள்ளாச்சியில் பிரதான தொழில் விவசாயம் ஆகும். அதுவும் தென்னை தான் ஏராளமான விவசாயிகளின் வாழ்வதாரம் என்றும் சொல்லலாம். நார் தொழில்கள், தென்னை விவசாயிகளின் பிரச்சினைகள் என்று ஏராளமாக உள்ளது. அது பற்றிய கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பினால் ஏதாவது தொகுதி மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கும். இதுவரை சுமார் 143 கேள்விகளுக்கு மேல் கேட்டுள்ளார். அதில் 2 மட்டுமே பொள்ளாச்சி சார்ந்தவையாக இருக்கிறது. மற்றவைகள் எல்லாம் வெளிமாநிலத்தை சேர்ந்தவை ஆகும். இது போன்ற எம்.பி.யை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று பொள்ளாச்சி மக்கள் புலம்பி வருகின்றனர்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News