Kathir News
Begin typing your search above and press return to search.

ஆட்சி கைக்கு வந்தா சொன்னது மறந்துருமா? மத்திய அரசே பிளஸ் 2 தேர்வை இரத்து செய்த நிலையில், நீட்டா நீட் தேர்வுக்கு ஸ்கெட்ச் போடும் தமிழக அரசு!

ஆட்சி கைக்கு வந்தா சொன்னது மறந்துருமா? மத்திய அரசே பிளஸ் 2 தேர்வை இரத்து செய்த நிலையில், நீட்டா நீட் தேர்வுக்கு ஸ்கெட்ச் போடும் தமிழக அரசு!

MuruganandhamBy : Muruganandham

  |  12 Jun 2021 12:45 AM GMT

தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்படும் என திமுக கூறி வந்த நிலையில் , நீட் பயிற்சியை தொடர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நீட் பயிற்சியை தொடர கல்வி துறை உத்தரவிட்டு இருப்பதாகவும், அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சியை ஆசிரியர்கள் மீண்டும் தொடங்கி உள்ளதாகவும், செய்தி வெளியாகியுள்ளது

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு என்ன காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டதோ, அந்தக் காரணம் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் பொருந்தும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருக்கின்ற காரணத்தையொட்டி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளே ரத்து செய்யப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், நீட் தேர்வு நடத்தப்படுவது என்பது மாணவர்களின் பாதுகாப்புக்கு நிச்சயம் குந்தகம் விளைவிக்கும்.

இப்பொழுது அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சியை நடத்துவதன் மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசே நினைக்கிறதோ என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.

கரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் ஆன்லைன் மூலம் பயிற்சி பெறக்கூடிய நிலையில் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர் மனநிலை இருக்கிறதா, அதற்கான வசதிகள் அவர்களுக்கு இருக்கிறதா என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறிதாக உள்ளது.

தற்போதைய சூழலில் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை சந்திப்பது என்பது மாணவ, மாணவியருக்கு, குறிப்பாக ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு மிகப்பெரிய சவால்.

தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னதைப்போல, முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வி உட்பட அனைத்து உயர் கல்விக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News