இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் - 22 யூ ட்யூப் சேனல்கள் அதிரடி முடக்கம்
By : Mohan Raj
இந்திய தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிய வருவதைத் தொடர்ந்து 22 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளது மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்.
இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் 22 யூடியூப் சேனல்கள் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் தற்பொழுது முடக்கப்பட்டுள்ளது. இதில் 18 யூடியூப் சேனல்கள் இந்தியாவைச் சேர்ந்ததும், 4 யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானை சார்ந்ததுமாகும். தேசிய பாதுகாப்பு குறித்தும், இந்திய இறையாண்மை குறித்தும் கேலி செய்யும் விதமாகவும், தவறான தகவல்களை பரப்பும் விதமாகவும் செயல்பட்டு வந்ததாக காரணம் கூறி அவை முடக்கப்பட்டுள்ளது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பின் தகவல் தொழில்நுட்ப சட்டம் வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் கீழ் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தொடரும் எனவும் இந்தியாவில் உள்ள அனைத்து சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் ஊடகங்களையும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் கவனித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.