உ.பி'யில் 250 தொகுதிகளை பா.ஜ.க வெல்லும் - கருத்து கணிப்பு அதிரடி முடிவுகள் !
By : Mohan Raj
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களிலும் பா.ஜ.க கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 5 மாநிலங்களிலும் எந்தெந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று சி-வோட்டர் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இன்று அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளில் சுமார் 250 இடங்கள் வரை பா.ஜனதா கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த கட்சிக்கு 41.3 சதவீத வாக்குகள் கிடைக்கும்.