Kathir News
Begin typing your search above and press return to search.

ஊழல் வழக்கு பொன்முடி மற்றும் கவுதம சிகாமணியை 3 மணி நேரம் உட்கார வைத்த நீதிபதி !

ஊழல் வழக்கு பொன்முடி மற்றும் கவுதம சிகாமணியை 3 மணி நேரம்  உட்கார வைத்த நீதிபதி !

Mohan RajBy : Mohan Raj

  |  4 Oct 2021 11:30 AM GMT

அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் நீதிபதி இன்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனே அலையவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2006'ம் ஆண்டு முதல் 2011'ம் ஆண்டு வரை தி.மு.க ஆட்சியின் போது விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தி.மு.க அமைச்சர் பொன்முடி, அவரது மகன், உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2012ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இளவழகன் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான கவுதம் சிகாமணி உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கின் நகலை வழங்குவதற்காக இரண்டு முறை உள்ளே அழைத்து பின்பு இருவரும் காத்திருக்க வைக்கப்பட்டனர்.

3 மணி நேரமாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான, கவுதம சிகாமணி உள்ளிட்டோர் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News