Kathir News
Begin typing your search above and press return to search.

காற்று மாசுபடுது'ன்னா 3 நாளைக்கு நடந்து போங்க - பொட்டில் அடித்தது போல் தீபாவளி வாழ்த்து கூறிய சத்குரு !

காற்று மாசுபடுதுன்னா 3 நாளைக்கு நடந்து போங்க - பொட்டில் அடித்தது போல் தீபாவளி வாழ்த்து கூறிய சத்குரு !

Mohan RajBy : Mohan Raj

  |  3 Nov 2021 9:15 AM GMT

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.


இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறிப்பிட்டுள்ளதாவது, "குழந்தைகளுக்கு பட்டாசுகள் அளித்திடும் சந்தோஷத்தை மறுக்க காற்றுமாசு ஒரு காரணமல்ல. நீங்கள் அவர்களுக்காக செய்யும் தியாகமாக, 3 நாட்களுக்கு அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழட்டும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "வீடியோவில், நான் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், நான் சிறுவனாக இருந்த போது பட்டாசு வெடிப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு செயலாக இருந்தது. நாங்கள் செப்டம்பர் மாதத்தில் இருந்தே பட்டாசுகள் பற்றி கனவு காண தொடங்கிவிடுவோம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் ஓரிரு மாதங்களுக்கு அந்த பட்டாசுகளை பத்திரப்படுத்தி தினமும் வெடித்து மகிழ்வோம். ஆனால், இப்போது என்னவென்றால், சுற்றுச்சூழல் மீது திடீர் அக்கறை காட்டும் சிலர் குழந்தைகள் பட்டாசு வெடிக்க கூடாது என கூறுகிறார்கள். இது சரியல்ல" என தெரிவித்துள்ளார்.


தீபாவளிக்கு பட்டாசுகள் வேண்டாம் என சில விஷமிகள் பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடதக்கது.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News