காஷ்மீரில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த பயங்கரவாத செயல்கள் - அமைதியான காஷ்மீராக மாறுகிறது
By : Mohan Raj
பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் இந்த 2021'ம் ஆண்டு காஷ்மீரில் குறைந்துள்ளன என ஜம்மு காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பா.ஜ.க அரசு இரண்டாம் முறையாக பதவி ஏற்ற பிறகு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி கவனம் செலுத்தி வருகிறது. மேலும் பயங்கரவாத்தை இங்கு குறைக்கும் அத்தனை நடவடிக்கைகளையும் சிறப்பாக கையாண்டு வருகிறது. இதனைதொடர்ந்து தற்பொழுது காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி தில்பாக் சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, "ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளை அதாவது 2018, 2019, 2020'ம் ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 2021'ல் பயங்கரவாத செயல்கள் கணிசமான அளவு குறைந்துள்ளது. அதே நேரத்தில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த 134 பேரில் 74 பேரை கொன்றுவிட்டோம், மேலும் 22 பேரை மீட்டு கைது செய்துள்ளோம்" என தெரிவித்தார்.
மேலும், "பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த ஆண்டு 34 பயங்கரவாதிகள் ஊடுருவலை கண்டறிந்து தடுத்துள்ளோம். இந்த ஆண்டு நடத்திய 100 ஆபரேஷன்களில் 22 கமோண்டோக்கள் உட்பட 182 பயங்கரவாதிகளை சுட்டுக் கொண்றுள்ளோம்" என தெரிவித்தார்.