நீங்கள் ஆர்ப்பாட்டத்தை அறிவியுங்கள் நாங்கள் மக்கள் கதவுகளை தட்டுகிறோம்:3 மாத கையெழுத்து இயக்கத்தை அறிவித்த அண்ணாமலை!

தமிழகத்தில் திமுகவின் அமைச்சர்கள் மும்மொழி கொள்கை என்றால் ஹிந்தி திணிப்பு என்ற தவறான பிரச்சாரத்தை முன்வைத்து வருகின்றனர் இதற்காக புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கை பற்றி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரிவான விளக்கத்தை கொடுத்திருந்தார் இந்த நிலையில் இன்று 2025 பிப்ரவரி 18 பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் உள்ள அதிகமாக இருக்கின்றனர்
சிபிஎஸ்இ கல்வி திட்டத்தில் பயிலும் மாணவர்கள் ஹிந்தி மொழியை படிக்கின்றனர் அதுவே தமிழகத்தில் மெட்ரிகுலேஷனில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி எங்கேயும் கட்டாயமாக இல்லை ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் ஆப்ஷனல் மொழி என்ன என்றால் தெலுங்கு கன்னடம் குஜராத்தி சமஸ்கிருதம் ஹிந்தி உருது மற்றும் பிரஞ்ச் போன்ற மொழிகள்தான் உள்ளது தமிழகத்தில் ஆங்கில வழியில் மெட்ரிகுலேஷன் படிக்கும் மாணவர்களுக்கு இத்தனை மொழிகளிலும் படிக்க வாய்ப்பு இருக்கிறது ஆனால் தமிழகத்தில் படிக்கும் 52 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளை மட்டும்தான் படிக்க வேண்டுமா
எத்தனையோ ஆயிரம் பேர் வேலை பார்க்கும் தமிழக அரசு தமிழகத்தில் மும்மொழி கொள்கையை படிப்பது 30 லட்சம் பேரா 20 லட்சம் பேரா என்று மழுப்புகிறார்கள்,இதற்கு தமிழக அரசே வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும் எதற்காக வீண் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள் மக்களுக்கு உபத்திரம் கொடுப்பதற்காக I.N.D.I.A கூட்டணியில் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள் நான் மறுபடியும் சொல்கிறேன் மூன்றாவது மொழி என்பது ஹிந்தி மொழியல்லா மாணவர்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழிதான் உலகமே மாறிக் கொண்டிருக்கிறது இந்த I.N.D.I.A கூட்டணியில் உள்ள மேற்குவங்கம் கேரளா கர்நாடகா மற்றும் தமிழகம் என நான்கு மாநிலங்களில் எடுத்து நான்கு மாநில முதல்வர்களிடம் பேசி உங்கள் மாநிலத்தின் மூன்றாவது மொழியாக தமிழை வையுங்கள்
சும்மா எல்லாரும் சேர்ந்து மூன்றாவது மொழி வேண்டாம் வேண்டாம் என்று சொன்னால் அதில் பாதிக்கப்படுவது நமது குழந்தைகள் இதனால் நேரடியாக நாங்கள் பெற்றோர்களிடம் கோரிக்கை வைக்கிறோம் பாஜக மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் மூளை முடுக்கெல்லாம் கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளது
ஒவ்வொரு கிராமத்திலிருந்து நகரம் வரை பாஜக தொண்டர்கள் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் ஏப்ரல் மே என 90 நாட்கள் முழுமையாக தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா மக்களையும் வீடுகளில் சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்த இருக்கிறோம் என்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்ட உள்ளதாக அண்ணாமலை கூறியிருக்கிறார்