Kathir News
Begin typing your search above and press return to search.

கரூர்: மாற்றுக் கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் இணைந்தனர்!

கரூர்: மாற்றுக் கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் இணைந்தனர்!

ThangaveluBy : Thangavelu

  |  24 March 2022 1:24 PM GMT

பிரதமர் மோடியில் நல்லாட்சி தொடரவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் கரத்தை வலுப்படுத்தவும் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் 300க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பின்னர் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அதே போன்று கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் முன்னிலையில் 300க்கும் மேற்பட்டோர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.


இது தொடர்பாக செந்தில்நாதன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பாரதப் பிரதமர் மோடி அவர்களின் நல்லாட்சி தொடரவும், மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் கரத்தை வலு சேர்க்கவும் திரு.கணேசன் மற்றும் திரு.தனபால் தலைமையில் மாற்று கட்சியில் இருந்து விலகி 300க்கும் மேற்பட்ட நபர்கள் கரூர் மாவட்ட அலுவலகத்தில் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டார்கள். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News