Kathir News
Begin typing your search above and press return to search.

எங்களுக்கு ஓட்டு போடலைனா 5 வருஷம் மக்களை புறக்கணிப்போம்: தி.மு.க. அமைச்சர் துரைமுருகனின் ஆணவப் பேச்சு!

எங்களுக்கு ஓட்டு போடலைனா 5 வருஷம் மக்களை புறக்கணிப்போம்: தி.மு.க. அமைச்சர்    துரைமுருகனின் ஆணவப் பேச்சு!

ThangaveluBy : Thangavelu

  |  15 Feb 2022 11:31 AM GMT

வாணியம்பாடியில் திமுக வேட்பாளர்களின் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொருளாளரும் தமிழக அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று பேசியதாவது: வாணியம்பாடியில் உள்ள மக்கள் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் உங்கள் ஊர் வருகின்ற 5 வருஷமும் புறக்கணிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்கிறேன் என்றார். இவரது பேச்சு தற்போது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. தற்போது தேர்தல் நடைபெற உள்ளதால் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்திக்காமல் காணொளி காட்சி வாயிலாக தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்ற ஊர்களில் பிரசாரம் செய்யும் பொழுது ஒவ்வொரு பெண்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரூ.1000 எப்போது கிடைக்கும், பெட்ரோல், டீசல் எப்போது குறைப்பீர்கள் என்ற கேள்விக்கு, உதயநிதி இன்னும் 4 வருஷம் இருக்கிறது. கொடுப்போம் என்று கூலாக பதிலை சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி வருவதையும் காண முடிகிறது.

தற்போது அந்த வரிசையில் திமுக அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. திமுகவிற்கு ஓட்டு போடவில்லை என்றால் தொடர்ந்து புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Source,Image Courtesy: Facebook


Next Story
கதிர் தொகுப்பு
Trending News