Kathir News
Begin typing your search above and press return to search.

சிங்கத்தை தொடர்ந்து 7 நெருப்புக்கோழிகள் உயிரிழப்பு - வண்டலூர் பூங்காவை பராமரிக்க திணறுகிறதா தி.மு.க அரசு?

சிங்கத்தை தொடர்ந்து 7 நெருப்புக்கோழிகள் உயிரிழப்பு - வண்டலூர் பூங்காவை பராமரிக்க திணறுகிறதா தி.மு.க அரசு?
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 Oct 2021 5:45 PM IST

வண்டலூர் பூங்காவில் சிங்கம், நெருப்புக்கோழி என தொடர்ந்து இறந்து வருவதால் அங்குள்ள பராமரிப்பு குறித்து கவலை எழுந்துள்ளது.

வண்டலூர் பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இதில் 2 சிங்கங்கள் இறந்துள்ளன. 8 சிங்கங்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தது. இந்நிலையில் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த 22 வயதான பெண் சிங்கம் கவிதா நேற்று முன்தினம் இறந்து போனது.

மேலும் நேற்று அடுத்தடுத்து மேலும் 5 நெருப்புக்கோழிகள் பராமரிக்கப்படும் இடத்தில் இறந்து கிடந்தது. நன்றாக மேய்ந்து கொண்டிருக்கும் இந்த நெருப்பு கோழிகள் திடீரென உட்கார்ந்து சாய்ந்து விடுவதாகவும் அதன் வாயில் இருந்து ரத்தம் வந்து இறந்து விடுவதாகவும் நெருப்புக் கோழியை பராமரிக்கும் ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து 7 நெருப்பு கோழிகளும் எவ்வாறு இறந்தது? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் நெருப்பு கோழிகளின் உடலை பரிசோதனை செய்து உள்ளனர். இவ்வாறாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள் தொடர்ச்சியாக இறப்பதனால் பூங்காவை தி.மு.க ஆட்சிகாலத்தில் சரியாக பராமரிக்காமல் விடுகின்றனரா என சந்தேகம் எழுந்துள்ளது.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News