கடந்த பத்தாண்டுகளில் 70 சதவிகிதம் சரிந்த இடதுசாரி தீவிரவாதம் - இது அமித்ஷா'வின் ஆட்டம் !

இந்திய அளவில் கடந்த பத்து ஆண்டுகளில் 70 சதவிகிதம் இடதுசாரி தீவிரவாத மற்றும், நக்சல் செயல்பாடுகள் குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் எனும் நாட்டிற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது, வன்முறை செயல்களில் ஈடுபடுவது, தொடர் கொள்ளை மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் இறங்குவது போன்ற நக்சல் செயல்பாடுகள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதிக அளவில் இருந்துவந்தன. குறிப்பாக நாட்டின் எல்லைப்புற மாநிலங்களில் இது அதிக அளவில் இருந்தன ஆனால் பா.ஜ.க ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு குறிப்பாக அமித்ஷா உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு இடதுசாரி சிந்தனை தீவிரவாதம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதையும், நாட்டு மக்களின் நிம்மதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதை பொறுப்பாக உணர்ந்து பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டதன் மூலம் 70 சதவிகித அளவிற்கு கடந்த பத்து ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாத சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சமீபத்தில் நடந்த இடதுசாரி தீவிரவாதம் (LWE) நிலையை ஆய்வு செய்ய ஒரு முக்கியமான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர்கள், ஆந்திராவின் உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசுகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்ந கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி வன்முறைச் சம்பவங்கள் 2009 ஆம் ஆண்டில் வரலாறு காணாத 2,258 ல் இருந்து 70 சதவிகிதம் குறைந்து 2020 ல் 665 ஆக குறைந்துள்ளது எனவும், இதன் விளைவாக ஏற்படும் இறப்புகளும் 2010 ஆம் ஆண்டில் 1,005 ஆக இருந்த அதிகபட்சம் 2020 இல் 183 ஆக 82 சதவிகிதம் குறைந்துள்ளது. மாவோயிஸ்ட் செல்வாக்கின் கீழ் உள்ள பகுதிகளின் பரவல் 96 மாவட்டங்களில் இருந்து 2010 இல் 53 ஆக சுருங்கியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த பகுதிகளில் சுதந்திரத்திற்கு பிறகு ஆட்சியாளர்கள் சரிவர வளர்ச்சியை ஏற்படுத்தாததே இதற்கு காரணம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்டீஸ்கர், மற்றும் மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில் பாதுகாப்பு கடுமையாக இல்லாத பகுதிகளில் பாதுகாப்பு முகாம்களை அதிகரிக்க ஒரு பெரிய மற்றும் வெற்றிகரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் இடதுசாரி தீவிரவாதத்தை சமாளிக்க குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டி.ஜி.பி மற்றும் மத்திய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். அது மட்டுமின்றி அவர் மாநில முதல்வர்களை இடதுசாரி தீவிரவாத செயல்களை தடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து இதனை சீர்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கும் போது,
• சாலை இணைப்பு: அனுமதிக்கப்பட்ட 17,600 கிமீ சாலைகளில், 9,434 கிமீ சாலைகள் அமைக்கப்பட்டன.
• தொலைத்தொடர்பு இணைப்பு: 2,343 புதிய மொபைல் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன மேலும் 2,542 கூடுதல் கோபுரங்கள் அடுத்த 18 மாதங்களில் நிறுவப்படும்.
• நிதி சேர்க்கை: 1,789 தபால் அலுவலகங்கள், 1,236 வங்கி கிளைகள், 1,077 ஏடிஎம்கள் மற்றும் 14,230 வங்கி நிருபர்கள் திறக்கப்பட்டுள்ளனர்.
• கல்வி: மொத்தம் 119 ஏகலவ்யா மாதிரி குடியிருப்பு பள்ளிகள் செயல்பட்டன, மேலும் இதுபோன்ற 115 பள்ளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன
• கல்வி: மொத்தம் 119 ஏகலவ்யா மாதிரி குடியிருப்பு பள்ளிகள் செயல்பட்டன, மேலும் இதுபோன்ற 115 பள்ளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக சுதந்திரத்திற்கு பின் அரசால் அதிகம் முன்னேற்றம் ஏற்படாத இடங்களை கண்டறிந்து அதனை சீர் செய்வதன் மூலம் அங்குள்ள இடதுசாரி தீவிரவாதம் குறைக்கப்படுவதுடன் அதன் மூலம் ஏற்படும் வன்முறைகள் 70 சதவிகிதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.