Kathir News
Begin typing your search above and press return to search.

நிலுவையில் 8 கிரிமினல் வழக்குகள்! வெளிச்சத்துக்கு வரும் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் மறுபக்கம்!

நிலுவையில் 8 கிரிமினல் வழக்குகள்! வெளிச்சத்துக்கு வரும் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் மறுபக்கம்!

MuruganandhamBy : Muruganandham

  |  17 March 2021 1:15 AM GMT

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் பத்தாவது முறையாகப் போட்டியிடும் நிலையில் அவர் மார்ச் 15ஆம் தேதியன்று மனுத்தாக்கல் செய்தார்.

அந்தக் கணக்கில் இருந்துதான் தேர்தல் தொடர்பான செலவுகளைச் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காட்பாடி இந்தியன் வங்கிக் கிளையில் துரைமுருகன் கணக்குத் தொடங்கி, அதில் தேர்தல் செலவுத் தொகையாக ரூ.30 லட்சத்து 74 ஆயிர்தது 622 தொகையை இருப்பு வைத்துள்ளார்.

துரைமுருகன் மற்றும் அவர் மனைவி இருவர் வசமும் மொத்தம் ரூ.29 கோடியே 61 லட்சத்து 91 ஆயிரத்து 882க்கு சொத்து உள்ளது.

துரைமுருகன் மீது 8 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 6 வழக்குகள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் தொடர்பானதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 வழக்குகள் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையால் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும் நிலுவையில் உள்ளன.

2016-ம் ஆண்டில் துரைமுருகன் வசம் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.57 லட்சத்து 8 ஆயிரத்து 425 ஆக இருந்தது. தற்போது, அது ரூ.2 கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருவது தெரிய வந்துள்ளது. துரைமுருகன் ரூ.86 லட்சத்து 12 ஆயிரத்து 782 தொகையையும், சாந்தகுமாரி ரூ.1 கோடியே 22 லட்சத்து 10 ஆயிரம் தொகையையும் மற்ற நபர்களுக்குக் கடனாகக் கொடுத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News