Kathir News
Begin typing your search above and press return to search.

அறவழியில் மாணவர்கள் போராட்டம், அடக்க நினைக்கும் தி.மு.க - 90 மாணவர்கள் கைது !

அறவழியில் மாணவர்கள் போராட்டம், அடக்க நினைக்கும் தி.மு.க - 90 மாணவர்கள் கைது !

Mohan RajBy : Mohan Raj

  |  18 Nov 2021 7:30 AM GMT

ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரை தமுக்கத்தில் போராட்டம் நடத்த முயன்ற 90 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த போது கல்லூரிகள் மூடப்பட்டு முழுமையாக ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட மற்ற படிப்புகளில் தேர்வுகளானது ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என்று கல்லூரிகள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வு நடத்த வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை தமுக்கத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 90 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். நேரடி தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் 700 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது மதுரை தமுக்கத்தில் போராட்டம் நடத்த முயன்ற 90 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை ஆளும் தி.மு.க அரசு அமைதி வழியில் போராடிய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தவில்லை மாறாக படிக்கும் மாணவர்களை வழக்கு போட்டு அடக்கி வருகிறது. வழக்கை சந்திக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற யோசனை கூட இன்றி தி.மு.க இந்த அராஜக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.


Source - Dinakaran

Next Story
கதிர் தொகுப்பு
Trending News