Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க செய்தி தொடர்பாளரின் சர்ச்சை பேச்சுக்கு H ராஜா கடும் தாக்கு!

தி.மு.க செய்தி தொடர்பாளரின் சர்ச்சை பேச்சுக்கு H ராஜா கடும் தாக்கு!

ParthasarathyBy : Parthasarathy

  |  31 May 2021 11:57 AM GMT

தொடர்ந்து தி.மு.க கட்சியை சேர்ந்த நபர்கள் பொது மேடை, தொலைக்காட்சி விவாதம், செய்தியாளர் சந்திப்பு என்று பல பொது இடங்களில் சர்ச்சைக்குரிய பேச்சை பேசுகின்றனர். தி.மு.க செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் தடுப்பு ஊசி குறித்து பேசிய பேச்சு சர்ச்சையாகி வருகிறது.


அந்த விவாதத்தில் கோயம்பத்தூரில் தடுப்பு ஊசி இல்லாமல் மக்கள் கதறுகிறார்கள் என்று எழுந்தபோது அப்பொழுது அவர் "கோயம்பத்தூர் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி இல்லையென்றால் அவர்களை நேரடியாக நரேந்திர மோடியிடம் கேட்கச் சொல்லுங்கள்" என்று கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக H ராஜா தனது ட்விட்டர் பக்கதில் ட்வீட் செய்துள்ளார். அவர் கூறுகையில் "தமிழகத்திலிருந்து பாஜகவிற்கு MP க்கள் இல்லாவிட்டாலும் இது போல் பாஜகவில் யாரும் பேசியதில்லை. மத்திய அரசு பாதுகாப்பு வழித்தடம் உள்ளிட்ட பல திட்டங்களை தந்துள்ளது. திமுக எப்போதுமே தமிழர்கள் விரோத கட்சிதான் என்பது மீண்டும் நிரூபணம். குரங்கு கையில் பூ மாலை" என்று விமர்சித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News