Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் பெண்கள் நடமாட முடியாத சூழல்: பா.ஜ.க மூத்த தலைவர் H.ராஜா கேள்வி?

தமிழகத்தில் பெண்கள் நடமாட முடியாத சூழல்: பா.ஜ.க மூத்த தலைவர் H.ராஜா கேள்வி?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Feb 2025 10:16 PM IST

தமிழகத்தில் பெண்கள் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என தமிழக பாஜக மூத்த தலைவர் H.ராஜா கூறியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்ததை கோவை மாவட்ட பாஜக சார்பில் வெற்றியை கொண்டாடினர். இதில் பங்கேற்க வந்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா அளித்த பேட்டியில் கூறும் போது, "டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜா ஆட்சி பிடித்துள்ளது கடந்த 1993ம் ஆண்டு 43 சதவீதம் ஓட்டுகளை பெற்றது, தற்போது அது 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடியின் நலத்திட்டங்களும், ஆம் ஆத்மி கட்சியின் ஊழல்களுமே இதற்கு காரணம். வரும் இடைத் தேர்தலிலும் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்று கூறினார்.


மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக 6680 கோடி ரூபாயும் பல்வேறு உள் கட்டமைப்புக்காக 14,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது, இதை திமுகவினர் மறைத்துவிட்டு மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர். திருப்பரங்குன்றம் மலையின் தல விருச்சத்தை மீட்டு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். மருதமலையில் ஆசியாவில் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்படும் என தெரிவித்து இருப்பது வரவேற்பிற்குரியது.

தமிழகத்தில் பெண்கள் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பெண் ஏ.டி.ஜி.பியாக இருக்கும் கல்பனா நாயக்கே தன் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார். உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதற்கு வெட்கப்பட வேண்டாமா? இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News