Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு MLA பேசும் பேச்சா இது.. புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி பொது மக்கள் பெருங்கோபம்..

ஒரு MLA பேசும் பேச்சா இது.. புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி பொது மக்கள் பெருங்கோபம்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Dec 2023 1:52 AM GMT

சென்னையின் தெற்குப் பகுதியில் உள்ள வேளச்சேரி சூறாவளியால் தொடர்ந்து பெய்த மழையைத் தொடர்ந்து மனிதாபிமான நெருக்கடியில் மக்கள் சிக்கி கொண்டு இருக்கிறார்கள். நகரம் முழுவதும் தற்போது வெள்ளத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக வேளச்சேரி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக தற்போது வரை திகழ்கிறது. கடுமையான ந வெள்ளம் குடியிருப்பாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நகரத்தின் மற்ற பகுதிகளுடனான தொடர்பை கூட தற்பொழுது தடுத்து இருக்கிறது.


இந்த நெருக்கடிக்கு மத்தியில், வேளச்சேரியை சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான ஆசன் மௌலானா நிலைமையை மதிப்பீடு செய்ய வருகை தந்தார். இருப்பினும், மௌலானா ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு உணர்ச்சியற்றதாகவும் அக்கறையற்றதாகவும் வந்த கருத்துக்களால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்காமல் இது இயற்கை தான் என்பது போல் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இதனால் அங்கு இருக்கும் பொதுமக்கள் மிகவும் கோபத்தின் உச்சிக்கு சென்று இருக்கிறார்கள். இது போன்ற கனமழை பெய்யும் போது, ​​இதுபோல் சம்பவங்கள் நடக்கும் . இயற்கையின் சீற்றம் என்று வரும்போது இதெல்லாம் மிகவும் சாதாரணமானது.


அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேளச்சேரி ஏரியின் உயரத்தை உயர்த்தியபோது, ​​உபரி நீர் மற்ற பகுதிகளை இயற்கையாகவே வெள்ளத்தில் மூழ்கடிக்கும். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் இந்த கருத்து கடந்த 3 நாட்களாக தண்ணீரில் தத்தளிக்கும் பகுதிவாசிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இன்று அவர் அப்பகுதியினூடாக சென்று கொண்டிருந்த போது பொதுமக்களால் அவர் எதிர்ப்பட்டார். மௌலானா நடந்து சென்றபோது, ​​கோபமடைந்த மக்கள் தங்கள் குறைகளை வெளிப்படுத்தினர்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News