Kathir News
Begin typing your search above and press return to search.

12-ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் முடிவெடுப்பார் - கல்வி அமைச்சர்!

12-ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் முடிவெடுப்பார் - கல்வி அமைச்சர்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  24 May 2021 9:00 AM GMT

12-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டார் அப்பொழுது பள்ளிகல்வி துறை சம்மந்தமான சில முக்கிய முடிவுகள் எடுக்கபடும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் சில முக்கிய முடிவுகளை முதல்வர் ஸ்டாலின் எடுப்பார் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, "12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசின் கருத்துகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது" என்றும், தனியார் பள்ளியில் ஆசிரியர் மீதான பாலியல் புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.

கொரோனா சூழலில் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து பின்னர் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News