Kathir News
Begin typing your search above and press return to search.

சந்திரபாபு உட்பட 12 தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்கள் இடை நீக்கம்.!

சந்திரபாபு உட்பட 12 தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்கள் இடை நீக்கம்.!

சந்திரபாபு உட்பட 12 தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்கள் இடை நீக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2020 6:21 PM GMT

சட்டப்பேரவையில் ஏற்பட்ட கடும் அமளி காரணமாக ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 12 தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆந்திர சட்டசபையில் இருந்து ஒரு நாள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சட்டசபை மேடையில் நுழைந்து கடும் அமளியில் ஈடுபட்டதாக ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் 12 தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் இடை நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.


இவர்கள் அனைவரும் சபாநயகரை நோக்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும், முதலமைச்சருக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர். இதனால் ஆந்திர சட்டப்பேரவையில் இன்று முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News