13 வயது சிறுமியிடம் பிரார்த்தனை எனக்கூறி பாலியல் அத்துமீறல் செய்த 54 வயது கிருஸ்துவ பாதிரியார் ஸ்டீபன்
By : Mohan Raj
ஊட்டியில் கிருஸ்துவ பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 54 வயது கிருஸ்துவ பாதிரியார் ஸ்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் கிருஸ்துவ பாதிரியார் சூரி ஸ்டீபன், 54 வயதான இவர் பலரது வீடுகளுக்கு சென்று கிருஸ்துவ மதத்தை பரப்பும் நோக்கில் பிரார்த்தனை கூட்டத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் நீலகிரி பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு பிராத்தனைக்கு சென்ன போது அந்த வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.
இந்த விவகாரம் அறிந்த அந்த சிறுமியின் தாயார் ஊட்டியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிரியார் ஸ்டீபன் மீது புகார் செய்தார். அதனைதொடர்ந்து விசாரணையின் முடிவில் பாதிரியார் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது ஊர்ஜிதமாகியது. இதனையடுத்து பாதிரியார் ஸ்டீபனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஸ்துவ பாதிரியார் 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.