Kathir News
Begin typing your search above and press return to search.

2 தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிடப்படும் - அண்ணாமலை பகீரங்க எச்சரிக்கை!

2 தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிடப்படும் - அண்ணாமலை பகீரங்க எச்சரிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  27 May 2022 2:02 PM GMT

தி.மு.க.வை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை ஜூன் மாதம் ஆதாரங்களுடன் வெளியிடப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடத்தினார். அப்போது செய்தியாளர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில்கள் அளித்து வந்தார். தமிழக மக்களுக்கு நேற்றைய நாள் சரித்திர நாள். தமிழக மக்களின் வரவேற்பு பிரதமரை நெகிழ செய்துள்ளது. இதற்காக கட்சியினர் அனைவரும் மிகக்கடுமையாக உழைத்தனர். தமிழ் கலாசாரத்தை தோளில் தூக்கி மண்ணை நேசித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். மேலும், அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது கட்சி கூட்டத்தில் பேசியதை போன்று இருந்தது.

மேலும், இந்தியாவிலேயே தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் அறிவுதிறன் குறைவாகவே இருந்தது பற்றி ஆங்கில நாளேடு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான பட்டத்தை தி.மு.க.வுக்கே தரவேண்டும். தாய் மொழியான தமிழில் அனைவரும் படிப்படை தி.மு.க. அரசு கட்டாயமாக்கவில்லை. ஆனால் புதிய தேசிய கல்விக்கொள்கை மூலமாக பிரதமர் மோடி சாதித்துள்ளார்.

இன்னொன்று முக்கியமான விஷயம் என்று கூறிய அண்ணாமலை, ஜூன் முதல் வாரத்தில் தி.மு.க. அரசு செய்த மிகப்பெரிய ஊழல் பட்டியலை புத்தகம் போட்டு வெளியிடப்படும். இதனால் கட்டாயம் அந்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். நாங்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். அண்ணாமலை பேச்சால் தற்போதே தி.மு.க. அமைச்சர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. யார் அந்த அமைச்சர்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News