Kathir News
Begin typing your search above and press return to search.

20% கமிஷன் அடிக்குறதுலேயே தி.மு.க குறியா இருக்காங்க - அண்ணாமலை அதிரடி !

20% கமிஷன் அடிக்குறதுலேயே தி.மு.க குறியா இருக்காங்க - அண்ணாமலை அதிரடி !

Mohan RajBy : Mohan Raj

  |  14 Dec 2021 10:45 AM GMT

"தமிழகத்தில் தி.மு.க அரசு கட்டுப்பணம், கமிஷன் பணம், கரப்ஷன் பணம் என மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது, ஒரு திட்டம் சார்ந்து நடைபெறும் வேலைகளில் 20% கமிஷன் கேட்கிறார்கள்" என அண்ணாமலை பகீரங்கமாக கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தமிழகத்தில் தி.மு.க அரசு கட்டுப்பணம், கமிஷன் பணம், கரப்ஷன் பணம் என மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. ஒரு திட்டம் சார்ந்து நடைபெறும் வேலைகளில் 20% கமிஷன் கேட்கிறார்கள், முடிக்கப்பட்ட பணிகளுக்கு தொகை ஒதுக்கீடு செய்ய 4% கமிஷனை கேட்கிறார்கள். இவை அனைத்தையும் தமிழகத்தில் ஒரு குடும்பம் மட்டுமே அனுபவிப்பதற்கு ஆட்சி நடைபெற்று வருகிறது" என்றார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது, "தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள் பற்றி இன்னும் நான்கு மாதங்களில் தமிழக மக்களே பேசத் தொடங்குவார்கள். அவர்களே அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலை உருவாகும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, வீடு தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை, வேறு பெயரில் தி.மு.கவினர் மாநில அரசின் திட்டங்களை போல செயல்படுத்துகின்றனர், எந்த ஒரு திட்டத்தையும் அறிவார்ந்து யோசித்து, புதிதாக மக்களுக்கு செயல்படுத்தும் திறன், தி.மு.க அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. மத்திய அரசு வரும் 2024-ம் ஆண்டுக்குள் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டுவரும் நிலையில், தமிழகத்தில் தி.மு.க அரசு அதிலும் கமிஷன் எதிர்பார்க்கின்றனர்" என பகீரங்கமாக குற்றம் சுமத்தினார்.

Source - Junior Vikatan


Next Story
கதிர் தொகுப்பு
Trending News