Kathir News
Begin typing your search above and press return to search.

2026-யில் தி.மு.கவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: இ.பி.எஸ் காரசார பேச்சு!

2026-யில் தி.மு.கவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: இ.பி.எஸ் காரசார பேச்சு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 May 2025 9:56 PM IST

மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது தான் அ.தி.மு.க மற்றும் பாஜக கூட்டணி, எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில், தி.மு.க., அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., தலைமை தாங்கினார். அ.தி.மு.க., முக்கிய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.


அந்தக் கூட்டத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி பேசும் பொழுது, "அ.தி.மு.க.,வை பா.ஜ., மிரட்டி பணிய வைத்து இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை, மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது தான் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி.

2026 -சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,விற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி, வலிமையானது மட்டுமல்ல.நாங்கள் வெற்றிக் கூட்டணி, வெற்றி பெறுவதற்காக கூட்டணி வைத்துள்ளோம்.இன்னும் இந்த கூட்டணிக்கு பல கட்சிகள் வர உள்ளன. எங்கள் தலைமையில் தான் கூட்டணி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்" என்பதையும் நினைவுகூர்ந்து உள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News