Begin typing your search above and press return to search.
2.5 கிலோ திமிங்கல எச்சம் கடத்திய தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் உட்பட 3 பேர் கைது!

By :
மதுரையில் திமுக கொடி கட்டப்பட்ட காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 2.5 கிலோ திமிங்கல எச்சம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் உறவினர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை, மேலூர் சாலையில் எஸ்.பி. தலைமையில் சிறப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக திமுக கொடி கட்டிய கார் ஒன்றை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரின் உள்ளே 2.5 கிலோ திமிங்கல எச்சம் கடத்தி வந்திருப்பதை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து திமிங்கல எச்சத்தை காரில் கடத்தி வந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் அழகு, பழனிசாமி, குமார் உள்ளிட்ட மூன்று பேரையும் மேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Source, Image Courtesy: Puthiyathalaimurai
Next Story