Kathir News
Begin typing your search above and press return to search.

தொழில் நேர்த்திய கனிமொழி கூட்டத்தில் காட்டிய 3 பேர்.. அலேக்காக தூக்கிய போலீஸ்.!

தொழில் நேர்த்திய கனிமொழி கூட்டத்தில் காட்டிய 3 பேர்.. அலேக்காக தூக்கிய போலீஸ்.!

தொழில் நேர்த்திய கனிமொழி கூட்டத்தில் காட்டிய 3 பேர்.. அலேக்காக தூக்கிய போலீஸ்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Dec 2020 7:19 PM GMT

கோவை சுந்தராபுரம் பகுதியில் கனிமொழி எம்.பி., பிரச்சார பயணத்திற்காகக் நேற்று இரவு வருவார் எனத் தகவல் வெளியாகியிருந்தது. இரவு 8 மணிக்கு வந்து விடுவார் எனக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அங்குக் குவிந்திருந்தனர். ஆனால் இரவு சுமார் பத்தரை மணியளவில் அங்குப் பிரச்சாரத்திற்கு வந்தார்.

பிரசாரத்தை முடித்து கொண்டு அவர் சென்ற பிறகு திமுக பிரமுகர் மணிகண்டன் தனது பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது பற்றி மணிகண்டன் தனது கட்சி நிர்வாகிகளிடம் இது பற்றி தகவல் கூறியுள்ளார்.

அதே சமயத்தில் மேலும் இரண்டு நிர்வாகிகளும் தங்கள் பாக்கெட்டில் இருந்த ரூ. 30 ஆயிரம், ரூ. 22 ஆயிரம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நடந்த இடத்தின் அருகே உள்ள கடைகள் முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 3 தொண்டர்கள் பணத்தைத் திருடிச் செல்வது தெளிவாகப் பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த 3 நபர்களை திமுக பிரமுகர்கள் தேடி கண்டுபிடித்துள்ளனர்.

போத்தனூர் காவல் துறையிடம் ஒப்படைத்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்சி தொண்டர்கள் யார், திருடர்கள் யார் என்றே தெரியாமல்தான் திமுகவில் உள்ளனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News