45 கட்சிகளுக்கு சென்ற கடிதம்: தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியது என்ன?

அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு பாஜக சார்பில் கடிதம் எழுதப்படும் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து தொகுதியில் மறு வரையறை தொடர்பாக சந்தேகம் மற்றும் அச்சம் இருந்தால் கட்சியின் தலைவர்கள் விளக்கம் கேட்டு கொள்ளலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மும்மொழிக் கொள்கைக்காக தமிழக பாஜக சார்பில் சமக்கல்வி எங்கள் உரிமை என்ற கையெழுத்து இயக்கம் துவக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதை பாஜக மூத்த தலைவர் முன்னால் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் துவங்கி வைத்தார்.இணையதளம் வாயிலாக ஆதரவு தெரிவிக்க புதிய கல்வி என்ற இணையதளத்தை முன்னால் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் அண்ணாமலை, சுதாகர் ரெட்டி,எச்.ராஜா என மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை மூன்றாவது மொழியாக இந்திய மொழி ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் தமிழக கட்சிகள் பலர் மும்மொழிக் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பாஜகவினர் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களிடம் கையெழுத்து வாங்க உள்ளனர் மற்றும் இணையதளத்தில் டிஜிட்டல் முறையில் கையெழுதிடும் வசதியும் உள்ளது. மே மாத இறுதிக்குள் ஒரு கோடி கையெழுத்துக்கள் பெற்று ஜனாதிபதியிடம் வழங்கி தமிழக மக்களின் குரலை கொண்டு சேர்ப்போம்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்ய வேண்டும், இது காங்கிரஸின் அடிப்படைக் கொள்கை இதை பிரதமர் மோடி எதிர்க்கிறார். தமிழகத்தில் எம்.பிகள் எண்ணிக்கை குறையப்போவதில்லை, 2000-ல் தொகுதி மறு வரையறையை ஒத்தி வைத்தது பாஜக சேர்ந்த பிரதமர் வாஜ்பாய். ஆனால் தற்போது 30 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார் இதனால் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து போராட்டக் குழுவை உருவாக்க எண்ணுகிறார்.தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு நேரம் உள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது குறித்து அறிவிப்பு வரும், இவர் அவர் கூறினார்.