Kathir News
Begin typing your search above and press return to search.

உடுமலைக்கு ஹெலிகாப்டரில் பறந்த கமல்.. அதிர்ச்சி கொடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.!

சினிமாவில் தனக்கென்று ஒரு தோற்றத்தை உருவாக்கி அதில் பயணம் செய்து வருபவர்தான் நடிகர் கமல். அவர் தற்போது கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை உருவாக்கி அதில் பயணம் செய்து வருகிறார்.

உடுமலைக்கு ஹெலிகாப்டரில் பறந்த கமல்.. அதிர்ச்சி கொடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.!

ThangaveluBy : Thangavelu

  |  17 March 2021 1:46 PM GMT

சினிமாவில் தனக்கென்று ஒரு தோற்றத்தை உருவாக்கி அதில் பயணம் செய்து வருபவர்தான் நடிகர் கமல். அவர் தற்போது கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை உருவாக்கி அதில் பயணம் செய்து வருகிறார்.

தற்போது சட்டமன்ற தேர்தல் வருவதால், தனது கட்சி வேட்பாளருக்கு கமல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதே போன்று கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமல் போட்டியிடுகிறார். அங்கு கடந்த 2 நாட்களாக பரப்புரை மேற்கொண்டார்.

இதன் பின்னர் தனது கட்சி வேட்பாளக்கு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டார். அதற்காக வேனில் பிரச்சாரத்திற்கு சென்றால் நேரம் அதிகமாகிறது. அது மட்டுமின்றி அலைச்சலும் உண்டாகிறது. இதற்கு மாற்று ஏற்பாடக ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்ய கமல் திட்டமிட்டார். அதற்காக கோவையில் இருந்து உடுமலைபேட்டைக்கு ஹெலிகாப்டரில் கமல் சென்றார்.





உடுமலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பரப்புரைக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது கமல் சென்ற ஹெலிகாப்டர் உடுமலையில் தரையிறங்கியது. அப்போது அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. 100க்கும் குறைவானர்களே அந்த கூட்டத்தில் இருந்தனர். ஒரு தலைவர் வருகிறார் என்றால் எப்படியும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருப்பார்கள். அதன் மத்தியில் பேசினால் தங்களுக்கு ஒரு கவுரவம் இருக்கும் என நினைப்பார்கள்.

அதே போன்று கமலும் உடுமலைக்கு ஹெலிகாப்டரில் கெத்தாக இறங்கினார். கூட்டத்தை பார்த்து நொந்துபோன அவர் வந்த ஹெலிகாப்டரிலேயே ஓடினார். கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். கூட்டத்திற்கு வந்த ஒரு சில பேரும் புலம்பிக்கொண்டே சென்றதை காணமுடிந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News