தி.மு.க. போகாத ஒரே கடை சாக்கடை மட்டும்தான்: மதுரையில் நடிகை விந்தியா பேச்சு.!
காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை தற்போது நடைபெற்ற போட்டியை காண வந்துள்ளனர். மக்களின் போராட்டத்தை மதித்து முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பிரதமரிடம் சென்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தார்.

மதுரை, திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஆதரவாக அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளரும், நடிகையுமான விந்தியா பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
எனக்கு ஜல்லிக்கட்டு என்றால் மிகவும் பிடிக்கும், திமுக மாதிரி பூம்பூம்மாடு கிடையாது. அங்கே வருவது எல்லாம் கொம்பு வைத்த சிங்கம் அதனை அடக்குவது தனி அழகுதான். ஆனால் இந்த முறை நான் தொலைக்காட்சியை பார்க்கும்போது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. விவரம் கெட்ட ராகுல்காந்தியும் விவஸ்த கெட்ட உதயநிதி ஸ்டாலின் வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். இந்த இரண்டு பேரில் ஒருவருக்கு பிரதமர் கனவு, மற்றொருவருக்கு முதலமைச்சர் கனவு, அதற்கு இரண்டுமே சரிப்பட்டு வராது என்றார்.
காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை தற்போது நடைபெற்ற போட்டியை காண வந்துள்ளனர். மக்களின் போராட்டத்தை மதித்து முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பிரதமரிடம் சென்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தார்.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் நமக்கு நாமே என்ற போஸ்டர் மட்டும் அடித்துக்கொள்வார். இந்த முறை கிராம சபை கூட்டம் நடத்தி ஊரே சிரித்ததுதான் மிச்சம் என்று கூறினார். மேலும், திமுகவினர் பிரச்சனை பண்ணி கடையில் உள்ள கல்லாபெட்டியை தூக்கி செல்வர். அதிலும் திமுக போகாத ஒரே கடை சாக்கடை மட்டும்தான்.
எனவே திமுகவினரை நம்ப வேண்டாம். வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று பேசினார். இவரது பேச்சுக்கு கூடியிருந்த கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக கைத்தட்டி வரவேற்றனர்.