Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க.வினருக்கு பயந்து ஹெல்மெட் அணிந்து வந்த அ.தி.மு.க. பா.ஜ.க. கவுன்சிலர்கள்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பேரூராட்சியில் பதவி ஏற்பதற்காக வந்த பாஜக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் ஹெல்மெட் அணிந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தி.மு.க.வினருக்கு பயந்து ஹெல்மெட் அணிந்து வந்த அ.தி.மு.க. பா.ஜ.க. கவுன்சிலர்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  3 March 2022 1:16 AM GMT

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பேரூராட்சியில் பதவி ஏற்பதற்காக வந்த பாஜக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் ஹெல்மெட் அணிந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

திசையன்வினை பேரூராட்சியில் 18 வார்டுகளில் அதிமுக 9 இடங்களையும், திமுக, காங்கிரஸ் தலா 2, பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் தலா ஒன்றும், சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று பேரும் வெற்றி பெற்றனர். இதனிடையே பாஜக ஆதரவுடன் அதிமுக பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கும் விழா நடைபெற்றது. அதன்படி திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவுக்கு அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் ஹெல்மெட் அணிந்து வந்தனர். ஏற்கனவே அதிமுக கவுன்சிலர்களை திமுகவினர் மிரட்டி கடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக மாவட்ட செயலாளர் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக திமுகவினர் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக ஹெல்மெட் அணிந்து வந்ததாக கூறினர்.

Source, Image Courtesy: News 7 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News