அதிமுக - தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை.!
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகள் கூட்டணி இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகள் கூட்டணி இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
அதே போன்று அதிமுக இதுவரை பாமகவுடன் மட்டும் தொகுதி உடன்பாடு சுமுகமாக முடித்துள்ளது. பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளிடம் இன்னும் தேர்தல் கூட்டணி முடிவாகவில்லை.
இதனிடையே கடந்த 2 நாட்களாக தேமுதிகவுடன் அதிமுக தலைமை பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. தேமுதிக, பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதி அளவு ஒதுக்க வேண்டும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் முரண்டு பிடித்து வருகிறார்.
இதனால் கூட்டணி இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் இன்று மாலை தேமுதிகவுடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறது. இதில் சுமூக உடன்பாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மூத்த தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.