Kathir News
Begin typing your search above and press return to search.

மொட்டை மட்டும்தான் இலவசமாக அடிக்கிறார்கள் ! - தி.மு.க. அரசை சாடிய ஜெயக்குமார்!

தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மொட்டை மட்டும்தான் இலவசமாக அடிக்கிறார்கள் ! - தி.மு.க. அரசை சாடிய ஜெயக்குமார்!

ThangaveluBy : Thangavelu

  |  6 Sep 2021 9:42 AM GMT

தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது: தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். பல்வேறு குழப்பங்கள் இருக்கும் நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்துவார்கள் என்ற சந்தேகம் உள்ளது.

வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்துவதற்கு பதில், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளோம்.

மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார். மேலும் அவர் பேசும்போது, தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு கட்டணம் இல்லை என்பது பற்றி பதில் அளித்த அவர், தமிழகத்தில் மொட்டை மட்டும்தான் இலவசமாக அடிக்கப்படுகிறது என்று திமுகவை சாடினார்.

Source, Image Courtesy: TopNews

https://www.toptamilnews.com/admk-ex-minister-jayakumar-press-meet/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News