Kathir News
Begin typing your search above and press return to search.

வீட்டில் சோதனை ஏன் ? முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் !

திமுகவுக்கு என் மீது கோபம் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

வீட்டில் சோதனை ஏன் ? முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் !

ThangaveluBy : Thangavelu

  |  14 Aug 2021 1:17 PM GMT

திமுகவுக்கு என் மீது கோபம் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள், உறவினர்கள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் எந்த ஒரு ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை எனவும் குறைந்த அளவிலான பணம் மற்றும் கிடைத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு எஸ்.பி.வேலுமணி இன்று மதியம் வந்தார். அப்போது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பல ஆயிரம் பேர் ஒன்று கூடி வரவேற்றனர். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கோவையில் கடந்த 50 ஆண்டுகால வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொடுத்ததால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பந்தாடப்படுகிறேன்.

எனவே வழக்கை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறேன். என்னுடைய வீட்டில் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் எனக்கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2823288

Next Story
கதிர் தொகுப்பு
Trending News