Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியே தொடரும்: பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

மேற்கு வங்கத்தில் தற்போது இரண்டு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், பாஜக வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியே தொடரும்: பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!
X

ThangaveluBy : Thangavelu

  |  4 April 2021 1:45 PM GMT

தமிழகத்தில் அதிமுக தலைமையில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று இரவு 7 மணியுடன் பரப்புரை முடிய உள்ள நிலையில், அதிமுக, பாஜக, பாமக வேட்பாளர்கள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அதே போன்று பாஜக, அதிமுக, தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளனர்.


இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியதாவது: தமிழகத்தில் மீண்டும் அதிமுக தலைமையிலான ஆட்சியை நாங்கள் ஆட்சி அமைப்போம். அதிமுக அரசின் நலத்திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தற்போது இரண்டு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், பாஜக வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது.


மேலும், அசாமில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தொடரும். புதுச்சேரி மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. அதே போன்று கேரளாவில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக வளர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News