Kathir News
Begin typing your search above and press return to search.

சொம்பை கொடுத்துட்டு அண்டாவை திருடிட்டு போகிறவர்கள் தி.மு.க.வினர்: உசிலம்பட்டி எம்.எல்.ஏ.வின் சரவெடி பேச்சு!

சொம்பைக் கொடுத்த மாரி கொடுத்துட்டு அண்டாவை திருடிட்டு போகிறவர்கள் திமுகவினர் என்று அதிமுக எம்.எல்.ஏ., பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சொம்பை கொடுத்துட்டு அண்டாவை திருடிட்டு போகிறவர்கள் தி.மு.க.வினர்: உசிலம்பட்டி எம்.எல்.ஏ.வின் சரவெடி பேச்சு!

ThangaveluBy : Thangavelu

  |  18 Feb 2022 3:00 AM GMT

சொம்பைக் கொடுத்த மாரி கொடுத்துட்டு அண்டாவை திருடிட்டு போகிறவர்கள் திமுகவினர் என்று அதிமுக எம்.எல்.ஏ., பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மொத்தம் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. வருகின்ற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக்கட்சிகளும் நேற்றுடன் (பிப்ரவரி 17) பிரச்சாரத்தை முடித்துக்கொண்டது.

அந்த வகையில் நேற்று (பிப்ரவரி 17) கடைசி நாள் என்பதால் அதிமுக கட்சியினர் வீடு, வீடாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதன் பின்னர் உசிலம்பட்டி எம்.எல்.ஏ., ஐயப்பன் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி வருகின்றனர். மேலும், உசிலம்பட்டியில் போட்டிடுகின்ற திமுக வேட்பாளர்கள் சொம்பைக் கொடுத்த மாதிரி கொடுத்துவிட்டு அண்டாவை திருடிசெல்பவர்கள் என்று விமர்சனம் செய்தார். அவரது பேச்சுக்கு ஒட்டுமொத்த மக்களும் கைத்தட்டி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News