Kathir News
Begin typing your search above and press return to search.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.. ஓ.பன்னீர்செல்வம் திடீர் கட்டளை.!

அதிமுகவில் இரட்டை தலைமை வந்த பின்னர் ஒருவருக்கு ஒருவர் மாற்றி அறிக்கைகள் விட்டு வந்த நிலையில், ஓபிஎஸ் தற்போது தொண்டர்களுக்கு பிறப்பித்த கட்டளை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.. ஓ.பன்னீர்செல்வம் திடீர் கட்டளை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2021 12:50 PM GMT

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனைகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அது போன்று அரசியல் நிகழ்வுகள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரே நேரத்தில் சந்திக்கும்போது, ஒரு சிலர் ஓபிஎஸ் வாழ்க என்ற கோஷமும், மற்றொரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்ற கோஷமும் எழுப்புகின்றனர்.




இது அதிமுகவில் பிளவுகளை ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். அதாவது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களை தவிர அதிமுக தலைமை அலுவலகத்தில் வேறு யாருடைய பெயர்களையும் குறிப்பிட்டு, வாழ்த்து கோஷம் எழுப்பக் கூடாது என்று தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

அதிமுகவில் இரட்டை தலைமை வந்த பின்னர் ஒருவருக்கு ஒருவர் மாற்றி அறிக்கைகள் விட்டு வந்த நிலையில், ஓபிஎஸ் தற்போது தொண்டர்களுக்கு பிறப்பித்த கட்டளை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News