மின்தடை காரணத்தை கண்டுப்பிடித்த செந்தில்பாலாஜிக்கு நோபல் பரிசு.. செல்லூர் ராஜூ.!
இதற்கு முன்னர் செல்லூர் ராஜூ அணை நீரை பாதுகாக்க வேண்டும் என்று தெர்மாகோல் கொண்டு போர்த்தினார். இவர் அப்போது மிகவும் பேமஸ் ஆனார். அன்றிலிருந்து இன்றுவரை விமர்சனத்திற்கு ஆளானார். தற்போது அணிலால் செந்தில் பாலாஜியும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கு காரணம் அணில்கள்தான் என்று அத்துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியில் தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்துக்கு பின்னர் இணையம் மற்றும் தொலைக்காட்சி, ஊடகங்களில் கடந்த சில நாட்களாகவே கலாய்க்கப்பட்டு வருகிறார்.
அது மட்டுமின்றி இணையங்களில் அணிலுடன் செந்தில் பாலாஜியும் சேர்த்து மீம்ஸ்கள் உலா வருகின்றனர். அதிமுக, பாமக உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் திமுக அமைச்சரின் கருத்தை கலாய்த்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி ஒன்றில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கலாய்த்துள்ளார். அவர் பேட்டியில் கூறியதாவது: செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும். செந்தில் பாலாஜி அணில் கண்டுப்பிடிப்பால் நான் தப்பித்து விட்டேன் என கூறினார். எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்று கொண்டிருந்த அணில்கள் தற்போது மின்கம்பிகளில் சென்று கொண்டிருக்கின்றது.
இதற்கு முன்னர் செல்லூர் ராஜூ அணை நீரை பாதுகாக்க வேண்டும் என்று தெர்மாகோல் கொண்டு போர்த்தினார். இவர் அப்போது மிகவும் பேமஸ் ஆனார். அன்றிலிருந்து இன்றுவரை விமர்சனத்திற்கு ஆளானார். தற்போது அணிலால் செந்தில் பாலாஜியும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.