Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க., அச்சத்தில் உள்ளது.. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.!

அ.தி.மு.க., அச்சத்தில் உள்ளது.. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.!

அ.தி.மு.க., அச்சத்தில் உள்ளது.. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Dec 2020 3:29 PM GMT

அதிமுக யாருக்கும் அச்சப்பட தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க., முன்னாள் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அ.தி.மு.க., பிரச்சார பொதுக்கூட்டம் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க., தலைமையில்தான் கூட்டணி. எந்த தேசிய கட்சி இப்படி பேசி கூட்டணிக்கு வந்தாலும் அவர்கள் அ.தி.மு.க.வுக்கு தேவையில்லை என கூறினார்.

அதேபோன்று சில புல்லுருவிகள் அதிமுகவை வீழ்த்த நினைத்தன. அது தவிடுபொடியாகிவிட்டது. அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்து போவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “அ.தி.மு.க.,வுக்கு ஆபத்து இருப்பது போலவும், அச்சம் இருப்பது போலவும் தோன்றுகிறது. அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள், நிர்வாகிகள் பேசியதை பார்க்கும் போது அச்சத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அ.தி.மு.க., யாருக்கும் பயப்பட தேவையில்லை” என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News