Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. சென்னைக்கு வர தலைமை உத்தரவு.!

தேமுதிக அதிமுக கூட்டணியை விட்டு விலகிய நிலையில், இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. சென்னைக்கு வர தலைமை உத்தரவு.!

ThangaveluBy : Thangavelu

  |  9 March 2021 11:51 AM GMT

தேமுதிக அதிமுக கூட்டணியை விட்டு விலகிய நிலையில், இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. வேட்புமனுத்தாக்கலுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அனைத்து மாவட்ட செயலாளர்களும் இன்று மாலை சென்னையில் இருக்க வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.




இந்த ஆலோசனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதி ஒதுக்கப்பட உள்ளது. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எவ்வாறு களப்பணி ஆற்றுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில் அதன் தாக்கம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News