ஒரே நாளில் 8,200 பேர் நேர்காணல்.. கலக்கும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு, நேர்காணல் உள்ளிட்டவைகளை செய்து வருகிறது. அந்த வகையில் அதிமுகவில் இன்று ஒரே நாளில் 8,200 பேருக்கு நேர்காணல் நடந்துள்ளது.
By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு, நேர்காணல் உள்ளிட்டவைகளை செய்து வருகிறது. அந்த வகையில் அதிமுகவில் இன்று ஒரே நாளில் 8,200 பேருக்கு நேர்காணல் நடந்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். இதில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுபவர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் என்று திருவிழா போன்று காட்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை வரை நேர்காணல் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பார் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் நேர்காணலுக்கு வந்தவர்களிடம் தொகுதி நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தனர்.
மேலும், நேர்காணலுக்கு வந்தவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் அதிமுகவை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் இருக்காது. கட்சி யாரை வேட்பாளராக அறிவித்தாலும் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். எதற்காகவும் சோர்வடைய கூடாது.
மேலும் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
ஒரே நாளில் அதிமுகவில் நேர்காணல் நடைபெற்றது. அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையும் அதிமுக மீது உள்ளது.