பெண்களை இழிவாக பேசும் திமுகவை கண்டித்து தருமபுரி முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.!
பெண்களை இழிவாக பேசும் திமுகவை கண்டித்து தருமபுரி முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.!
![பெண்களை இழிவாக பேசும் திமுகவை கண்டித்து தருமபுரி முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.! பெண்களை இழிவாக பேசும் திமுகவை கண்டித்து தருமபுரி முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/11752d8934d0f51fcff8ff682490acd9.jpg)
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா குறித்தும் மிகவும் கீழ்த்தரமான முறையில் பேசினார். இதனை கண்டிக்கின்ற வகையில் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர், திமுகவை கண்டித்து கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதே போன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று தாலுகா அலுவலகம் முன்பாக கண்டன போராட்டம் நடைபெற்றது. தருமபுரி தாலுகா அலுவலகம் முன்பாகவும், பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் பெண்களை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்தார். இதனை கண்டிக்கின்ற வகையில்தான் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.