Begin typing your search above and press return to search.
அ.தி.மு.க.வுடன் உறவு சுமூகமாக உள்ளது.. ஜி.கே.வாசன் தகவல்.!
அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி உடன்பாடு இன்று முடிவாகிறது. இதனையொட்டி அதிமுக உறவு சுமுகமாக உள்ளது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அதிமுக உடன் தொகுதி பங்கீடு 3 கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தியது.
By : Thangavelu
அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி உடன்பாடு இன்று முடிவாகிறது. இதனையொட்டி அதிமுக உறவு சுமுகமாக உள்ளது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அதிமுக உடன் தொகுதி பங்கீடு 3 கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தியது.
இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டணியிலிருந்து நேற்று தேமுதிக விலகிய நிலையில், தங்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்கக் கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே தமாகாவிற்கு 7 இடங்கள் வரை ஒதுக்கப்படும் என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில், இன்று அதிமுகவோடு பேசி தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிடும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். மேலும், அதிமுக தமாகா உறவில் எந்த விரிசலும் இல்லை எனவும் கூறினார்.
Next Story