Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க., 100 வருடங்கள் ஆட்சி செய்யும்.. அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.!

அ.தி.மு.க., 100 வருடங்கள் ஆட்சி செய்யும்.. அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.!

அ.தி.மு.க., 100 வருடங்கள் ஆட்சி செய்யும்.. அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Dec 2020 11:01 AM GMT

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி. மைதானத்தில் அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப் பட்டிருக்கிறது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அ.தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முகக் கவசம் அணிந்து வருகை தந்துள்ளனர்.

ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் மேடையில் இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடக்க உரை ஆற்றினார். அவர் பேசியபோது, அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறப்போவது உறுதி.
அ.தி.மு.க., இதுவரையிலும் 7 முறை ஆட்சி அமைத்துள்ளது. அ.தி.மு.க., தொடர்ந்து 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று உறுதி கூறுகிறேன் என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News