Kathir News
Begin typing your search above and press return to search.

நீட் விலக்கு குறித்து மத்திய அரசு கருத்து சொல்லி ஒரு மாதம் ஆகிறது இன்னும் ஏன் வெளியிடவில்லை - அன்புமணி ராமதாஸ் கேள்வி

நீட் விலக்கு சட்டம் குறித்து மத்திய அரசின் கருத்துக்களை தமிழக அரசு வெளியிட வேண்டுமென அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளளார்.

நீட் விலக்கு குறித்து மத்திய அரசு கருத்து சொல்லி ஒரு மாதம் ஆகிறது இன்னும் ஏன் வெளியிடவில்லை - அன்புமணி ராமதாஸ் கேள்வி

Mohan RajBy : Mohan Raj

  |  20 July 2022 1:18 PM GMT

நீட் விலக்கு சட்டம் குறித்து மத்திய அரசின் கருத்துக்களை தமிழக அரசு வெளியிட வேண்டுமென அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளளார்.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு அரசு நீட் விளக்கு சட்டம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை சில கருத்துக்களை கூறியிருப்பதாகவும் அவை குறித்த விளக்கங்களை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு விளக்கம் கோரி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துவிட்ட நிலையில் அது குறித்து விபரங்களை தமிழ்நாடு மக்களிடமும் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியது தமிழக அரசின் தலையாய கடுமையாகும்.

அது குறித்த விபரங்களை தமிழ்நாடு மக்களிடம் தமிழக அரசு பகிர்ந்து கொள்ளாது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

ஒருவேளை மத்திய அரசின் கருத்துக்கள் சாதகமானவையாக இருந்தால் அது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை போக்கியிருக்கும் மூன்று மாணவர்களின் தற்கொலை தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கும்.

அத்துடன் மத்திய அரசின் கருத்துக்கள் குறித்த விளக்கங்கள் உடனடியாக அனுப்பி வைத்து நீட் விலக்கு சட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News