Kathir News
Begin typing your search above and press return to search.

"எங்கே 3 மாதத்தில் மா.சுப்ரமணியன் நீட் தேர்வு படித்து எழுதட்டும் பார்க்கலாம்" - அண்ணாமலை கேள்வி.

"எங்கே 3 மாதத்தில் மா.சுப்ரமணியன் நீட் தேர்வு படித்து எழுதட்டும் பார்க்கலாம்" - சவால் விட்ட அண்ணாமலை

எங்கே 3 மாதத்தில் மா.சுப்ரமணியன் நீட் தேர்வு படித்து எழுதட்டும் பார்க்கலாம் - அண்ணாமலை கேள்வி.
X

Mohan RajBy : Mohan Raj

  |  4 Aug 2021 5:26 AM GMT

நல்லா படிக்குற குழந்தைகளை நீட் வராது படிக்காதீர்கள் என பொய் கூறி தி.மு.க ஏமாற்றி விட்டதாகவும், 3 மாதத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் படித்து நீட் எழுதி காட்ட முடியுமா? என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்தி போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள மணிமண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட தீரன் சின்னமலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது, "தேர்தல் நேரத்தில் நீட் கண்டிப்பாக வராது என பொய்வாக்குறுதியை தி.மு.க அளித்து ஆட்சியை பிடித்து விட்டு தற்பொழுது நீட் தேர்வு நடத்தப்படும் என கூறுவது படிக்கும் மாணவர்களை ஏமாற்றுவதாகும், பாவம் படிக்கும் குழந்தைகளை தி.மு.க ஏமாற்றியுள்ளது. எங்கே 3 மாதத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் படித்து நீட் தேர்வு எழுதிவிடுவாரா?" எனவும் கேள்வி எழுப்பினார்.

https://youtu.be/BN834HNHRhg

Next Story
கதிர் தொகுப்பு
Trending News